Monday, November 17, 2008

இறைவணக்கம் குருவணக்கம்

வாழ்க வையகம் குருவே அருள் வாழ்க வளமுடன்
இறைவணக்கம்


ஆதியெனும் பரம்பொருள்மெய் எழுச்சி பெற்று
அணுவென்ற உயிராகி அணுக்கள் கூடி
மோதியிணைந் தியங்குகின்ற நிலைமைக்கேற்ப
மூலகங்கள் பலவாகி அவையி ணைந்து
பேதித்த அண்டகோடிகளாய் மற்றும்
பிறப்பு இறப்பிடைஉணர்த லியக்கமாகி
நீதிநெறி உணர்மாந்தராகி வாழும்
நிலையுணர்ந்து தொண்டாற்றி இன்பம் காண்போம்.

குருவணக்கம்

சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்ற
சீரறிய செய்த குருவே!
அந்தநிலை தனிலறிவு அசைவற்றிருக்கப் பெரும்
ஆனந்தம் பொங்குதங்கே!
இந்தபெரும் உலகமிசை எடுத்த பல பிறவிகளின்
இறுதிப் பயனாகிய
சந்ததமும் எனைமறவாத சாந்தவாழ்வளித்தோய் என்
சந்தோஷ செய்தி இதுவே.


No comments:

Post a Comment